May 15, 2008

பன்னாட்டு அளவிலான வளர் தமிழ் மாநாடு..!!

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்)..


பன்னாட்டு அளவிலே, பாடுபட்டு உண்மையிலே தமிழை வளர்த்துக் கொண்டிருக்கும் நபர்கள், தமிழை வளர்க்க பாடுபடும் நபர்கள் இவர்களை இனம் கண்டு ஊக்குவித்து இவர்களை கெளரவிக்குமுகமாக மாபெரும் மாநாடு "புதுடெல்லி" பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிகிழமை (16/05/08) ஞாயிற்று கிழமையுமாக (18/05/08) இரு தினங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

அவுஸ்ரெலியாவை பொறுத்தமட்டில் தமிழை பேச்சளவில் மட்டும் வளர்க்காமல் செயல் வடிவம் மூலமும் தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்களுடைய பட்டியலில் முதன்மையில் தெரிவு செய்யபட்டிருப்பவர் அவுஸ்ரெலிய இன்பதமிழ வானொலியின் பிரதான அறிவிப்பாளர் மற்றும் பணிப்பாளரான திரு.பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள்.













வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி பல்கலைகழகத்தில் நடைபெறவிருக்கும் "பன்னாட்டு அளவிளான வளர் தமிழ் மாநாட்டில்" திரு.பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் கெளரவிக்கபட இருக்கிறார்கள். இது அவுஸ்ரெலியா வாழ் தமிழர்களை பொறுத்தமட்டில் மிகவும் இனிப்பான ஒரு செய்தி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.



இவ்வேளையிள் அவரின் சேவை மென்மேலும் தொடரவேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்...(வாய் பேச்சில் மட்டுமின்றி தமிழை செயல் வடிவிலும் வளர்த்து கொண்டிருக்கும் பிரபா அண்ணாவிற்கு என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள்)..



பால(சிங்கம்)...ம்ம்ம் எப்பவும் சிங்கம் வந்து "சிங்கிள்"..தான்..!!



படம் பெறபட்ட மூலம் - (britishtamil.com)







அப்ப நான் வரட்டா!!

No comments: