எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..அட தலைப்பை பார்த்து போட்டு யோசிக்கிறியளோ ஒமோம் வழமையா நம்ம சாத்திரி அங்கிள் தான் "ஜரோப்பிய அவலம்" எழுதுவார் உது என்ன "ஜம்மு பேபியின் அவலம்" என்று பார்க்கிறது விளங்குது...
ஆனா என்ன அவர் எழுதுற அவலம் வேற நான் எழுத போற அவலம் வேற அது தான் வித்தியாசம் பாருங்கோ..(வாசித்து போட்டு பிறகு என்னை ஏசுறதில்ல சொல்லிட்டன்)..சரி எனி நாங்கள் போவோமோ "ஜம்மு பேபியின் அவலதிற்கு"..
அவலத்தை வாசித்து பிறகு அழுறதில்ல சொல்லிட்டன்....போறதிற்கு முன்னால ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை" சொல்லனும் அல்லோ,இன்னைக்கு என்ன சொல்லுவோம் சரி கிடைத்திச்சு அதாவது நாம எதிர்கொள்ளுற அவலங்கள் தான் நம்மளிற்கு ஏணியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்...இந்த அவலதிற்கு இந்த சிந்தனை கொஞ்சம் "ஓவர்" தான்...சரி எனி விசயதிற்கு போவோம்..
அன்னைக்கு சனிகிழமை இருக்கும் என்று நினைக்கிறன் வழமையா நாம சனிகிழமை என்டா பின்னேரம் 3 மணி போல தான் எழும்புவோம் அது வேற விசயம் பாருங்கோ..(இப்ப உங்க குளிர் வேற தொடங்கிட்டு அல்லோ)..அன்றைக்கு ஒரு மாதிரி எழும்பி எங்கையாச்சு ஊர் சுத்த போவோமா என்று யோசித்து கொண்டிருக்கையில மாமி வந்து சொன்னா ஒருக்கா வாடா என்னோட ஒரு இடத்தை போகனும் என்று..
அட நேக்கு சா என்று போயிட்டு..(பின்ன நம்மன்ட ஊர் சுத்துற "பிளான்" (திட்டம்) எல்லாம் என்னாகிறது என்று தான் ஆனாலும் ஒன்னும் செய்ய ஏலாது அல்லோ வாறன் என்று சொல்லி போட்டன்,ஒரு மாதிரி வெளிகிட்டு காரில ஏறி போக வேண்டிய இடதிற்கு போயிட்டோம் ..(காரை பார்க் பண்ணி போட்டு நடக்க வேண்டியதா போயிட்டு)..
அப்ப மாமி கூட நடந்து கொண்டு போகக்க..(வேறேன்ன மாமி கூட கதைக்க போறன் ஊர் வம்பளக்கிறது தானே)..ஏனென்டா நாம "கோம்புஸ்" என்ற இடதிற்கு தான் போனனாங்க சிட்னியில அநேகமான "டமிழ்ஸ்" இருக்கிற இடம் என்றா உந்த "கோம்புஸ்" தான் உந்த இடத்தை பற்றி சொல்லனும் என்டா சொல்லி கொண்டே போகலாம் குட்டி யாழ்பாணம் என்று நம்ம டமிழ்ஸ் அந்த இடதிற்கு பெயரும் வைத்திருக்கீனம்...
உந்த இடத்தில நம்மன்ட ஆச்சிமார்,அப்புமார் எல்லாம் இருந்து சமா எல்லாம் வைப்பீனம் பாருங்கோ அட அட அப்படி பட்ட ஒரு இடம்,இன்னொன்று முக்கியமான விசயம் தமிழ் பெட்டைகளை "சைட்" அடிக்கனும் என்டா உந்த பக்கம் வரணும் ஏனேன்டா உங்க தான் எல்லாரும் இருக்கீனம்..(ஒன்னு சொல்ல மறந்திட்டன் எங்கன்ட கந்தப்பு தாத்தா கூட உந்த அப்புமார் கூட்டதோட சேர்ந்து அரட்டை அடிக்க வாறவர் )..
இப்படிபட்ட ஒரு இடத்தில ஊர் வம்பளந்து கொண்டு நடக்கிறது தனிசுகம் பாருங்கோ..(உதில முக்கியமான விசயம் என்னவென்டா இந்த பக்கம் நாம அடிகொருக்கா வாறது தான் ஆனா இப்ப மாமி கூட வாற படியா அச்சா பிள்ளையாட்டம் வாறோம்)..சரி..சரி கண்டுகொள்ளாதையுங்கோ..
இப்ப என்ன விசயம் என்டா நாம "பிரண்ட்ஸ்" கூடப் போகக்க நம்ம வழியே தனி வழியா இருக்கும் இப்படி மாமி அல்லது சொந்தகாரங்க கூட போகக்க ஜம்மு பேபி எனி மேல் இல்லாத அச்சா பிள்ளை..(அட நம்ம பசங்க நான் இப்படி யார் கூடவும் போகக்க வந்தா அப்படி இப்படி கண்ணை காட்டிடுவோம் உடனே அவங்களும் அடக்கி வாசித்துடுவாங்க பாருங்கோ) ..உதுகான்டி நினைக்கிறதில்ல மாமிக்கு நம்மளை பற்றி தெரியாது என்டு நன்னா தெரியும் என்டாலும் ஒரு நடிப்பு தானே....
பிறகு என்னவென்டா நேக்கு உங்க இருக்கிறவன் எல்லாரும் பிரண்ட் ஏனேன்டா அந்த இரகசியத்தை சொல்லுறன் கேளுங்கோ..(நாம் வந்து நம்ம "யூனி" பக்கம் போறோமோ இல்லையோ சிட்னியில இருக்கிற எல்லா "யூனி" பக்கவும் போவோம்)..ஏனென்டு உங்களுக்கு தெரியும் தானே..(சரி..சரி கண்டு கொள்ளாதையுங்கோ)..
உப்படி போறதால எல்லாரையும் தெரியும்...(அட நான் மட்டும் இல்ல உங்க இருக்கிற எல்லாரும் உப்படி தான் பாருங்கோ)..அட உதுக்காக நினைக்கிறதில்ல நான் என்ட "யூனி" பக்கம் போறதே இல்லை என்டு அங்கையும் போறனான் அல்லோ..அப்பப்ப நாம போவோம் வருவோம் இருப்போம்..
உப்படி போறதால அங்க இங்க என்டு நம்மளிற்கு "தோஸ்த்மார்கள்"...அட சிலர் வந்து என்ட பெயர சொல்லுவாங்க நான் யாரென்று வேற யோசிக்கிறது அத விடுவோம்...(உப்படி எல்லாம் நான் செய்யிறது வீட்ட தெரியாது அல்லோ)...
சரி எனி அன்னைக்கு நடந்ததை பார்போம் என்ன...
இப்படி,நானும் மாமியும் நடந்து கொண்டு போகக்க ஒருத்தன் என்ட பெயர சொல்லி கூப்பிட்டன்..(நானும் யாரடா இவன் என்று திரும்பி பார்த்தா)..எங்கையோ பார்த்த மாதிரி தான் இருக்கு ஆனா எங்க என்டு விளங்கள்ள அவன் ஓடி வந்து "எப்படிடா மச்சி" என்று கேட்க நாமளும் இருக்கிறோம்டா என்று சொல்லி போட்டு யாரேன்று யோசித்து கொண்டிருந்தேன்...
உடனே வந்தவன் அங்கால மாமி இருக்கிறாவே என்டு கூட யோசிக்காம ஏன்டா இப்ப நம்ம "யூனி" பக்கம் வாறதில்ல மச்சி என்ன ஆச்சு என்டு கேட்க.. (அப்ப தான் நேக்கு விளங்கிச்சு ஓ அவனா இவனென்டு)..என்ன செய்யிறது பக்கதில வேற மாமி உவன் கதைத்து கொண்டே போறான் அங்கால மாமிக்கு சிரிப்பா இருக்கு நமக்கு எப்படி இருக்கும்..(என்ட யோசனை எல்லாம் உவனை எப்படி கழற்றி விடுறது என்று)..
ஆனா அவனும் விடுற மாதிரி இல்ல கிளறி கொண்டே போறான்..(மனசில அட நேரம் காலம் பார்த்து கதைக்க தெரியாதா என்று கோபம் வருது ஆனா என்ன செய்ய)..உடனே உந்த கதையை மாத்த இது தான் என்ட மாமி என்று சொல்ல அப்ப தான் அவனுக்கு மாமி என்டே விளங்கிச்சு..அவரின்ட முகமும் ஒரு மாதிரி போச்சு..(அப்ப நமக்கு எப்படி இருக்கும் பாருங்கோ)..
உடனே அவர் சரிடா நான் போகணும் என்டு போட்டு போயிட்டான்..(கடசியா மாற்றுபட்டது யார் நாம தானே)..உடனே நன்ன பிள்ளையாட்டம் நடிக்கமாட்டோமா என்ன..(மாமி வேற ஒன்னுமே கேட்கிறா இல்ல கேட்டு போட்டா என்டா நம்மளிற்கு நிம்மதி அல்லோ)..அட அவாவிற்கு நம்மள பற்றி நன்னா தெரியும் தான் ஆனா இப்படி எல்லாம் தெரியாதே என்ன..
வரவேண்டிய இடதிற்கு வந்திட்டோம் அங்க பார்த்தா ஒரு பொண்ணு...(அது என்ன கொடுமை என்டா அதையும் எனக்கு தெரியும் ஏனென்டா இப்படி இன்னொரு "யூனி" பக்கம் போகக்க கண்டது தான்)..அவா உடனே "காய்" என்று சொல்ல நாமளும் சிரித்து கொண்டு சொன்னது தான்....(ஒரு மனிசனிற்கு இப்படி எல்லாம் சோதனை வரணுமா என்ன)...
அப்படியே வந்த அலுவலை முடித்து போட்டு வரக்க..(நாம அப்பவும் நன்ன பிள்ளையாட்டம் தான் வாறோம்)..உடனே மாமி அங்க ஒரு பெட்டை போறா அவளையும் தெரியுமோ என்று கேட்டு சிரிக்க...(அட நாம என்ன செய்ய முடியும் பாருங்கோ)..
கடசியா ஒரு மாதிரி வீட்ட வந்து சேர்ந்தாச்சு..(வீட்டையும் எல்லாரும் நக்கல் தான் என்ன செய்யிறது)...அன்னைக்கே நினைத்திட்டன்..(எனி மற்ற "யூனி" பக்கம் போறதில்லை என்று அது தான் இல்ல)..எனி சொந்தகாரங்க கூட எல்லாம் தமிழ் ஆட்கள் இருக்கிற பக்கம் போகவே கூடாது என்று..
அட என்ன பார்க்கிறியள் இது தான் என்ட அவலம்...(ஏன் உது அவலம் இல்லையோ அந்த இடத்தில நின்று பார்த்தா தான் விளங்கும்)..அப்பப்ப நேக்கு அவலங்கள் வரும் ஆனா இப்படியான அவலங்கள் தான் அப்பப்ப உங்களை சந்திக்கிறேன் என்ன...
உங்களுக்கு ஏதாச்சும் உப்படியான அவலங்கள் நடந்திருந்தா சொல்லுங்கோ பார்போம்..(அட வெட்கபடாம சொல்லுங்கோ நானே வெட்கபடல்ல)..அட நான் எப்ப தான் வெட்கபட்டிருக்கிறேன் என்ன..ஒன்னு சொல்லட்டோ பல அவலங்கள் வருவது "அவளாள்" தான்..
அடுத்த அவலத்துடன் அவலமாக வருகிறேன்..(நீங்கள் இதை வாசித்து பட போகும் அவலங்களுக்கு இப்பவே என்ட வாழ்த்துக்கள்)..
அப்ப நான் வரட்டா!!