
அன்பிற்கு நிகரான அன்னையவளுக்கு வாழ்த்து சொல்ல ஒரு தினம் போதாது.. (தினம் தினம் அவளை வாழ்த்தலாம் இதயத்தில்)..அன்னையர் தினமான இன்று லோகத்தில் இருக்கும் அன்னையவளுக்கு எல்லாம் ஜம்மு பேபியின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..
என்ட மம்மிக்கும்..(அம்மாவிற்கும்)..இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..நினைத்து பார்த்தால் அம்மாவிடம் அடி வாங்குவது கூட ஒரு சுகம் தான் ஏனேனில் அடித்த மறுகணே அணைக்கும் கை இந்த உலகத்தில் தாயின் அன்பு கை மட்டுமே..
அந்த அன்பு கரங்களுக்கு என் இனிய அன்பினை முத்தமாக வெளிபடுத்தி இனிய அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி..(சோ ஹப்பி).. ம்ம்..அதோட யாழ்களத்தில் இருக்கிற அன்னையர்களுக்கும் எனி அன்னை ஆக போறவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எனி அன்னை ஆக போறவைக்கு இப்பவே என்ட "அட்வான்ஸ்" வாழ்த்துக்கள்.. (அப்படியே நேக்கு வர போறவாவிற்கும் என்ட அன்னையர் தின வாழ்த்துக்கள்)..என்ன பார்க்கிறியள் வர போறாவிற்கு இப்பவே வாழ்த்து தெரிவிப்பதில பிழையே இல்லை பாருங்கோ..
அன்னையில் அன்பில்
அன்னையின் அரவணைப்பில்
அன்னையின் அன்னத்தில்
அன்னப் பறவைகளானோம்..
அடிக்கும் கைகள்
அகிலத்தில் பல
அடித்து விட்டும்
அணைக்கும் கை
அன்னையவள் கை மட்டுமே..
அந்த அன்னையவளின்
அன்பு கை என் வாழ்க்கை
பயணத்தில் என்றும்
வேண்டும் அம்மா..
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... அனைத்து அன்னையர்களுக்குமாக எனது தெரிவில்...(நேக்கு ரொம்ப பிடித்த பாட்டு)..ஒரு பாட்டு ஓ நீங்களும் கேட்டு பாருங்கோ ..
அப்ப நான் வரட்டா!!








No comments:
Post a Comment