
தென்றலுடன் தனிமையில் பேச
தனிமையில் நான் கடற்கரை மணலில்
தென்றல் என்னை வருடி சென்றது
ஆனால் மெளனம் கொண்டது
தான் ஏனோ..??
தென்றலின் மெளனம் என்னை
மெல்ல கொல்ல.
இதமாக தென்றல் என்னை வந்து
அணைத்து செல்ல..
ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி
என் கால்களை முத்தமிட்டு சென்றாள்.
அந்த சுகத்தில் என்னை நான் மறக்க
அவள் தன் முத்தத்தால் என் கால்களை
நனைக்க..
என் மனம் தடுமாறி தென்றலை மறந்து
தென்றலாக அலை பாய.
என் காலில் முத்தமிட்டவள் மெல்ல
நகைத்த வண்ணம் செல்ல.
அவளுடன் நானும் மெல்ல செல்ல
அவளுக்குள் ஆதவன் மூழ்குவதை
கண்டு என் விழி சிவக்க.
அவள் மேனி சிவக்க.
மீண்டும் என்னிடம் வந்தவள்
என் காலை வாரிவிட்டு
இன்னொருவன் பாதம்
தரிசித்த போது.
தென்றல் என்னை பார்த்து நகைக்க
ஆகாயம் என் நிலை பார்த்து கறுக்க
என் கடல் தேவதையோ - என்
பாதச்சுவடுகளை அழித்து கொண்டிருந்தாள்.!!
தனிமையில் நான் கடற்கரை மணலில்
தென்றல் என்னை வருடி சென்றது
ஆனால் மெளனம் கொண்டது
தான் ஏனோ..??
தென்றலின் மெளனம் என்னை
மெல்ல கொல்ல.
இதமாக தென்றல் என்னை வந்து
அணைத்து செல்ல..
ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி
என் கால்களை முத்தமிட்டு சென்றாள்.
அந்த சுகத்தில் என்னை நான் மறக்க
அவள் தன் முத்தத்தால் என் கால்களை
நனைக்க..
என் மனம் தடுமாறி தென்றலை மறந்து
தென்றலாக அலை பாய.
என் காலில் முத்தமிட்டவள் மெல்ல
நகைத்த வண்ணம் செல்ல.
அவளுடன் நானும் மெல்ல செல்ல
அவளுக்குள் ஆதவன் மூழ்குவதை
கண்டு என் விழி சிவக்க.
அவள் மேனி சிவக்க.
மீண்டும் என்னிடம் வந்தவள்
என் காலை வாரிவிட்டு
இன்னொருவன் பாதம்
தரிசித்த போது.
தென்றல் என்னை பார்த்து நகைக்க
ஆகாயம் என் நிலை பார்த்து கறுக்க
என் கடல் தேவதையோ - என்
பாதச்சுவடுகளை அழித்து கொண்டிருந்தாள்.!!
அப்ப நான் வரட்டா..!!








No comments:
Post a Comment