June 19, 2008

விழியும் மலரும்..!!


மலர்ந்த அந்த பொழுதினில்
வீசிய இதமான தென்றலில்
மலர்களின் மெல்லிசை
கேட்டு மலர்ந்தது என்
விழி...

மலர்ந்த விழி
மொட்டுடைந்த
அந்த மலரின்
மெல்லிசை வந்த
திசையினை
தேடின..!!

தேடிய அந்த விழியில்
விழுந்ததோ பல மலர்கள்
வாடின விழிகள்..

பூத்திருந்த மலர்களை
பார்த்தும்..

மலர்கள் ஒவ்வொன்றினதும்
இதமான சிரிப்பு
விழிகளிள்
விழுந்த
போதும்..!!

விழிகள் அதனை
ரசிக்கவில்லை..

வீசிய தென்றலில்
மலர்கள் தலையசைத்து
விழியிடம்..

பேசின பல
கதைகள்..
ஆனால்
விழியோ
மெளனம்..!!

விழியின் ஏக்கம்
அறியுமா
மலர்கள்..

மலரின் குணம்
அறியுமா
விழிகள்..

மலரில் தேன் அருந்த
தேனிக்கள் மெதுவாக
குத்த..!!

மலருக்கு வலித்ததோ
தெரியவில்லை
ஆனால்

விழியில் இருந்து
வடிந்தது கண்ணீர்..

அந்த கண்ணீர் துளி
விழுந்தது ஒரு மலரின்
மேல்..

அந்த துளிபட்டு
மலர் சிரிந்தது
விழி வியந்தது..!!

விழி மலர்ந்தது
தான் தேடிய
மலரை விழியால்
நுகர்ந்ததில்..

விழி மலருக்கே
பரிசளித்தது ஒரு
மலரை..

பல கதைகள் பேசியது
விழி..
மலரோ மெளனம்..!!

மலர் மெளனித்த வேளை
விழி தன் விழியால்
விளித்தது
தன்
காதல்..

விழியின் காதல் சொற்
கேட்டு.
மலர் தலை குனிந்தது தான்
ஏனோ..

விழி மூட முடியாமல்
விழி தவிர்க்க..

மனம் பேசியது
உன் மலரை போல
தான்..

என் மனதில்
இருக்கும்
மலரவளும்
என..

இதை கேட்ட
விழி.

மெதுவாக
தன் இமைகளை
மூடி
கொண்டது..!!





அப்ப நான் வரட்டா!!

No comments: